இடுகைகள்

கதைவெளி மனிதர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திலீபன்: தொன்மமாக்கும் புனைவுகள்

படம்
சரவண கார்த்திகேயனின் அந்தக் கதை அவரது வலைப்பக்கத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: கல்லளை. உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட விடுதலைப்புலி, திலீபனைத் தமிழின் தொன்மக்கதாபாத்திரமாக முன்வைத்துள்ள கதை அது. கவனிக்கவும்: தொன்ம மீட்டுருவாக்கமோ (De-mythification), மறுவிளக்கமோ (Re-interpretation) அல்ல. இது தொன்ம ஆக்கம் (Mythification).

மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

படம்
நீண்ட காலமாகச் சிறுகதைகளில் செயல்பட்டு வரும் யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை ஒற்றை அடையாளத்திற்குள் அடக்குவது எளிதன்று; தேவையானதுமல்ல. அவரது கதைகளை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கும் ஒருவருக்கு வெளிசார்ந்த அடையாளங்கள் கொண்ட கதைகள் எழுதியிருக்கிறார் எனச் சொல்வதும், அவை மதுரை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்வது எளிதாக சொல்லக்கூடிய ஒன்றுதான். எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும்   யுவன் சந்திரசேகரின் பல கதைகளில் விவாதிக்கப்பட்ட எழுத்து வாழ்க்கையும் எழுதப்படும் வாழ்க்கையும் என்ற அடிக்கருத்து இக்கதையில் இன்னொரு கோணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் இணையும் புள்ளிகளும் விலகும் புள்ளிகளும் குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இலக்கியத் திறனாய்வுக்கான சொல்லாடல்களாக இருப்பவை. இச்சொல்லாடலைப் புனைவாக்கி எழுதப்படும் கதைக்குள் அலையும் எழுத்தாளப் பாத்திரத்தை, அறியப்பட்ட எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையோடு நிரல்நிறுத்தி வாசித்துவிடத்தூண்டும் குறிப்புகள் கதைக்குள் எங்காவது கிடைத்துவிடும். எனது வாசிப்புக்குள் அதிகமான சிறுகதைகளில் உலவும் பாத்திரமாக இருந்தவர் ஜி.ந

முழுமையும் முழுமையின்மையும் - சுரேஷ்குமாரின் இரண்டு கதைகள்

படம்
பாதிக்கதையைத் தாண்டும்போது இந்தக் கதை இப்படித்தான் முடியும் என்று நினைக்கும் வாய்ப்பைத் தராத எழுத்தாளர்களே தொடர்ந்து வாசிப்பதற்கான கதைகளைத் தருபவர்களாக இருக்கிறார்கள். இம்மாத உயிர்மையில் சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதியுள்ள பெரியம்மை அப்படியொரு கதை.

விசாரணைக்குள்ளாகும் குடும்ப அமைப்பு : கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டு கதைகள்

தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பது இந்தியக் குடும்ப அமைப்பு. மாற்றத்தை உள்ளடக்கிய நகர்வுகள் குறித்து நேர்மறையான நிலைப்பாட்டையோ, எதிர்நிலையான எண்ணங்களையோ முன்வைக்காமல் விவாதத்தை உருவாக்கும்போது ஒரு புனைகதை நவீனத்தை உள்வாங்கிய கதையாக மாறிவிடும். குடும்ப அமைப்பு என்று மட்டுமாக இல்லை. இந்திய வாழ்க்கையில் விவாதிக்க வேண்டிய நம்பிக்கைகள், சடங்குகள், அமைப்புகள், முரண்கள் என மரபான சொல்லாடல்கள் பல உள்ளன. அவற்றின் மீது நவீனத்தை உள்வாங்கிய புதிய எழுத்தாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அண்மைக்கதை பல உணர்த்துகின்றன.

இருவேறு காரணங்கள்

படம்
முன்குறிப்பாகச் சில .. . இந்தக் கட்டுரையில் அண்மையில் நான் வாசித்த இரண்டு கதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பரிந்துரைக்கான காரணங்கள் இரண்டு கதைகளுக்கும் ஒன்றல்ல என்ற குறிப்போடு பரிந்துரை செய்கிறேன். வாசிக்கும் எல்லாக்கதைகளைப் பற்றியும் விமரிசன/ விவாதக்குறிப்புகளைச் சொல்லியே ஆகவேண்டும் என நினைப்பதில்லை. இந்தக் கதைகளை வாசித்து முடித்தவுடன் உடனே எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அயல்பயணத் திட்டமிடல்களால் அப்போது எழுத இயலவில்லை. பயணத்திற்குப் பின்னும் எழுதாமல் தவிர்க்க முடியவில்லை. திரும்பவும் அவர்களிடம் கதைகளின் படிகளை வாங்கி வாசித்துவிட்டு எழுதுகிறேன். இதுதான் மனதில் தங்கி விடும் இலக்கியப்பனுவலில் திமிறல். எதையாவது சொல் எனத் திமிறிக்கொண்டே இருக்கும்.

ஆக்கத்திறன் வெளிப்படும் கதை வடிவங்கள்

படம்
எழுதப்படும் உரிப்பொருள் (theme) அல்லது பொருண்மை ஒன்றுதான். அதை முன்வைக்க நினைக்கும் எழுத்தாளரின் பார்வைக்கோணமும், புனைவைப் பற்றிய புரிதலும் வேறுவேறு பனுவல்களாக மாறுகின்றன. உரிப்பொருள் ஒன்றாக இருந்தாலும் வெளிப்படுத்த நினைக்கும் நோக்கமே கதையின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. அண்மையில் சரவணன் சந்திரனின் ஜிலேபி (யாவரும்.காம் /ஏப்ரல், 2023) சு.வேணுகோபாலின் மோகப்புயல் (வல்லினம், மே,2023) கதையையும் அடுத்தடுத்து வாசித்தேன். இரண்டு சிறுகதைகளின் உரிப்பொருளும் காமம் என்ற பொருண்மைக்குள் அடங்கக்கூடிய ஒன்றுதான். உணர்வு சார்ந்து எழுத்தாளர்கள் காமத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கதைகளின் தலைப்பும், அத்தலைப்பு கதைக்குள் உருவாக்கும் உணர்வும் ஓரளவு வெளிப்படுத்துகின்றன.

இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்

படம்
நடப்பு வாழ்க்கை உருவாக்கி அளிக்கும் சிக்கல்களும் முரண்பாடுகளும் கேள்விகளாக நிற்கும்போது விசாரணைகள் தொடங்குகின்றன. அவற்றிற்கான விடைகளைச் சொந்த வாழ்விலிருந்தும், சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்தும் கண்டடைந்து அவற்றின் போக்கில் விளக்கம் ஒன்றை முன்வைக்கும் கதைகள் அனுபவவாதப் புனைவுகளாக அடையாளம் பெற்றுக்கொள்கின்றன. அதே முரணையும் சிக்கலையும் கொண்ட முடிச்சுகளும் வகைமாதிரிகளும் தொன்மங்களிலும் வரலாற்றிலும் கிடைக்கின்றபோது அதன் சாயலில் புனைவுகள் உருவாக்கப்படுவதும் உண்டு. புனைகதைக்குள் இடம்பெறும் பாத்திரப்பெயரோ, நிகழ்வுப் பெயரோ,அடிக்கருத்தை முன்வைக்கும் சொற்கூட்டமோ, உரையாடலின் வீச்சோ அந்தக் குறிப்பிட்ட தொன்மநிகழ்வையோ, வரலாற்று நிகழ்வையோ நினைவுபடுத்திக் கதையை அதன் போக்கில் வாசிக்கச் செய்துவிடும்.

சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – பீத்தோவனின் சிம்ஃபொனியை முன்வைத்து

படம்
நண்பகல் நேரத்து மயக்கம் – சினிமாவைப்பார்த்து(மார்ச்11)விட்டு அச்சிதழ் ஒன்றுக்குக் கட்டுரை எழுதலாம் என்று தொடங்கினேன். தொடங்கியவுடனேயே சில நாட்களுக்கு முன்பு வாசித்த அந்தக்கதை நினைவுக்கு வந்தது. நினைவுக்கு வந்த கதை பீத்தோவனின் சிம்ஃபொனி. எழுதியவர் சரவணகார்த்திகேயன். அக்கதை கிழக்கு டுடே இணையப்பத்திரிகையில் வந்துள்ள குறிப்பை முகநூலில் சொல்லியிருந்தார் சரவணகார்த்திகேயன். அதில் நான் வாசிக்கவிலை. எழுத்தாளர் சிஎஸ்கே (writercsk.com) என்ற அவரது வலைப்பூவில் கதையை வாசித்திருந்தேன். உயிர்மையில் வந்த நூல்கள் தவிர அவரது எழுத்துகளில் பலவற்றை அதில் தான் வாசித்திருக்கிறேன் .

அண்மைக் கதைகள் இரண்டு- 1.சரவணன் சந்திரன்

படம்
அவரது கதைககளுக்குள்  பெரும்பாலும் தன்னை ஒரு பாத்திரமாக்கி – கதைசொல்லும் இடத்தில் நிறுத்திக்கொண்டு சொல்கிறார். இந்தச் சொல்முறையில் கதைக்கு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்றாலும் புனைவுத்தன்மை குறைவு. எழுதுபவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து கட்டுரையை நெருங்கிவிடும். இதனை முன்பே சில     தடவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். என்றாலும் அந்த சொல்முறை அவருக்கு உவப்பானதாகவும் நெருக்கமானதாகவும் இருப்பதாக நினைத்திருக்கலாம்.

யாவரும்.காம். நல்ல கதைத்தேர்வுகள்

படம்
பதிவேற்றம் பெற்றுள்ள (2023, ஜனவரி) மூன்று சிறுகதைகள் இவை:           பிரமிளா பிரதீபன் – 1929                     ரம்யா – ட்ராமா குயின்,           வைரவன் -லெ.ரா-பிரயாணம் இம்மூன்று கதைகளையும் ஒரே வாசிப்பில் வாசிக்க முடியவில்லை. எல்லா விதத்திலும் வேறுபாடுகளோடு இருக்கின்றன. 

ஹேமிகிருஷ் – விலகி நிற்கும் கதைசொல்லி

வாசிப்பும் தடைகளும் தொடர்ச்சியாக வாசித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தடுப்பதில் முதல் காரணியாக இருப்பது வித்தியாசம் காட்டாத தன்மை என்றே சொல்வேன். கவிதைத் தொகுதிகளில் இந்தத் தடையை உணர, பத்திருபது கவிதைகளையாவது தாண்டவேண்டியதிருக்கும். ஆனால் சிறுகதைத் தொகுப்பு என்றால் நிலைமையே வேறு. தொகுப்பொன்றில் முதல் கதையை வாசித்து முடித்து விட்டு அடுத்த கதையைத் தொடங்கி வாசிக்கும்போது இரண்டிலும் புனைவுக்கூறு சார்ந்து வித்தியாசம் இல்லையென்றால் மூன்றாவதாக ஒன்றைத் தொடங்குவவதில் சுணக்கம் ஏற்பட்டு விடுவதைத் தடுக்கமுடியாது. நாட்கணக்கிலான இடைவெளிக்குப் பின்னரே வாசிப்பைத் தொடர முடியும். இந்தச் சுணக்கம் ஏற்படாமல் அண்மையில் வாசித்து முடித்த சிறுகதைத் தொகுப்பாக ஹேமிகிருஷின் நெட்டுயிர்ப்பு. தொடர் வாசிப்பில் தொகுப்பின் 10 கதைகளையும் வாசித்து முடிக்க முடிந்தது. இந்த ஒரு காரணமே, அண்மையில் வந்த சிறுகதைத் தொகுப்புகளில் கவனித்து வாசிக்க வேண்டிய தொகுப்பு எனப் பரிந்துரைக்கப் போதும் என்று நினைக்கிறேன்.

எஸ்.ரா.வின் ஞாபகக்கல்: நல்லதொரு உருவகக்கதை

படம்
எஸ்.ராமகிருஷ்ணனின் ஞாபகக்கல், பெண்ணென்னும் பொதுப்பெயருக்குரியவளாக இருக்கும் வரை அவளுக்குள்ளிருக்கும் விருப்பங்கள், ஆசைகள், கனவுகள் எல்லாம் குடும்பத்தின் பாத்திரம் ஒன்றைத் தாங்கும்போது தொலைந்துபோகும் மாயத்தை உருவகமாக முன்வைத்துள்ளது. ஆண் முதன்மைக்குடும்ப அமைப்பில் பெண்களின் விருப்பங்களைத் தொலைத்துக்கட்டும் பாத்திரங்களாக மனைவி, அம்மா போன்ற பாத்திரங்கள் இருப்பதைக் கதை விவரிப்பின் மூலம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். குறிப்பாக இந்தியக் குடும்ப அமைப்பின் மீது நேரடியான விமரிசனத்தைக் கதை முன்வைக்கிறது.

விஜயராவணனின் ஆரஞர் உற்றன கண் : தமிழில் எழுதப்பெற்ற உலகக்கதை

படம்
விஜயராவணனின் கதையில் இடம்பெற்றுள்ள இரண்டு பாத்திரங்களும் தமிழர்கள் அல்ல; தமிழ் நிலப்பரப்புகளோடு தொடர்புடையவர்களும் அல்ல. ஜெர்மனியின் ‘ஸ்டட்கர்ட்’ நகரில் ஆண்டு நிறைவு நாளின் கொண்டாட்டக் காட்சிகளின் பின்னணியில் தற்செயலாகச் சந்தித்த புலம்பெயர்ந்த இளைஞனோடு நட்புக் கொண்டு, அவனோடு தன்னை இணைத்துக் கொண்ட ஹன்னா என்ற ஜெர்மானிய நங்கையின் காதல் கதை எனச் சுருக்கமாக நான் சொல்லிவிட முடியும்.

தொடரும் இ.பா.வின் விமரிசனங்கள்

படம்
இந்திரா பார்த்தசாரதிக்கு இன்று வயது 92 முடிந்துவிட்டது. இப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறார். இம்மாத உயிர்மையில் அவர் எழுதிய கதையின் தலைப்பு: பிரிவு. இரண்டு மாதங்களுக்கு முன்னால் மே மாதத்தில் இதே உயிர்மையில் எழுதிய கதையின் தலைப்பு : பொய்க்கடவுள்.

பிரமிளா பிரதீபன் கதைகள் -ஒரு வாசிப்புக்குறிப்பு

  கடந்த கால் நூற்றாண்டுக்கால இலங்கைத் தமிழ் இலக்கியத்தைப் போரின் பின்னணியிலேயே வாசித்துப் புரிந்து கொண்டிருக்கிறது தமிழக வாசகப்பரப்பு. ஆனால் எனது வாசிப்பின் தொடக்கம் அப்படியானதல்ல. காத்திறமான இலக்கிய வரலாற்றுப்பார்வைக்காகவும் இலக்கியத் திறனாய்வுக்காகவும் இலங்கையின் ஆளுமைகளை வாசித்த தொடக்கம் என்னுடையது. அத்தோடு கே.டானியலின் புனைகதைகளும் ஜீவாவின் மல்லிகையும் எனது தொடக்கநிலை வாசிப்புக்குள் இருந்தன.

எழுத்தில் வரையப்பட்ட சித்திரங்கள்

கலை இலக்கியங்களின் முதன்மை வெளிப்பாடு ‘போலச்செய்தல்’ என்னும் பிரதியாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அவற்றின் நோக்கத்திற்கும் அடிப்படைக்கூறுகளின் கலவைக்கும் ஏற்பக் கலை, இலக்கிய வடிவங்களும் வகைகளும் மாறுபடுகின்றன. எழுத்துக்கலைகளைத் தனது வெளிப்பாட்டுக்கருவியாகக் கைக்கொள்ளும் ஒருவர் அவரது எழுத்தில் மனிதர்களைப் பிரதியாக்கம் செய்வதை முதன்மை நோக்கமாக கொள்கிறார் என்றாலும், எல்லா வடிவத்திலும் அதுதான் முதன்மையாக இருப்பதில்லை. கவிதையில் மனித உணர்வுகளையும் நாடகத்தில் மனிதர்களின் முரண்நிலையையும் கதைகளில் நேரடியாக மனிதர்களின் மொத்த அடையாளங்களையும் காட்டிவிட முடிகிறது. கதைகளிலும் கூட, எந்த உணர்வுகளைத் தூக்கலாக நிறுத்திக்காட்டலாம் என்பதன் வழியாகவும், வாசிப்பவர்களிடம் எதனைக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்று தீர்மானிப்பதன் மூலமும் கதைகளின் வகைப்பாடுகளைச் சுட்ட முடியும்.

மதுரையை எழுதும் எழுத்து

  முப்பது ஆண்டுகளுக்கு முன் மதுரையைவிட்டு வெளியேறி புதுச்சேரி, நெல்லை, வார்சா, பாளையங்கோட்டையென்ச் சுற்றிவிட்டுத் திரும்பவும் மதுரைக்கருகில் இருக்கும் திருமங்கலத்திற்குக் குடிவந்துவிடலாம் முடிவுசெய்தேன். அதனால்   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையின் இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தேடல்கள் தொடங்கின. அத்தேடலில் புதிதாக எழுத வந்திருக்கும் மதுரைக்காரர்களின் இலக்கியப்பனுவல்களைப் பத்திரிகைகளிலும் இணையப் பக்கங்களிலும் வாசிக்கத் தொடங்கினேன்.

வீரத்திலிருந்து காமம் நோக்கி : புலம்பெயர்ப்புனைவுகளின் நகர்வுகள்

படம்
இலக்கியப்பரப்பில் புலப்பெயர்வு (daispora) இலக்கியங்கள் என்ற அடையாளம் பழையது. ஆனால் தமிழ் இலக்கியப் பரப்பில் அதன் வருகை – அடையாளப்படுத்துதல் தனி ஈழத்துக்கான போருக்குப் பின்னான புலப்பெயர்வின் வழியாகவே நிகழ்ந்தது. அதற்கும் முன்பே காலனிய காலத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் தமிழர்கள் ஐரோப்பியர்களின் காலனியாதிக்கக் கண்டங்களுக்கும் நாடுகளுக்கும் புலம் பெயர்க்கப்பட்டார்கள் என்பது வரலாறு.

எழுதத்தூண்டும் கதைகள் –1

படம்
வாசித்து முடித்தவுடன், இதுபோன்றதொரு பனுவலை இதே வகைப்பாட்டில் வாசித்திருக்கிறோம் என்று தோன்றினால் அதைக் குறித்துக்கூட வைத்துக்கொள்ளத் தோன்றுவதில்லை. அதற்குப் பதிலாக அந்தப் பனுவலின் ஏதோவொரு புனைவாக்கக் கூறு புதியதாகத் தோன்றும்போது, அது என்ன? என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கான விடையைத் தேடித் திரும்பவும் பனுவலுக்குள் பயணம் செய்யும்போது, பனுவலுக்குள்ளிருக்கும் அந்தப் புத்தாக்கக் கூறும், அதன் வழியாகக் கிடைக்கும் அனுபவங்கள் அந்தப் பனுவலை விவாதிக்க வேண்டிய பனுவலாக மாற்றிவிடுகின்றன. அனுபவங்கள் என்பன விவரிக்கப்பட்ட நிகழ்வுகளோடு, புற வாழ்க்கையின் காட்சிகளும், தொடர்புகளும் ஒத்துப்போகும் தன்மையாக இருக்கலாம். முரண்படும் நிலைகளாகவும் இருக்கலாம். இவ்விரண்டிற்கும் அப்பால், பனுவலில் பயன்படுத்தும் மொழியும், மொழியைக்கொண்டு உருவாக்கப்படும் சொல்முறைகளாகக்கூட இருக்கலாம். இந்த மூன்று கதைகளில் வாசித்தவுடன் எழுதத்தூண்டிய கதை இளங்கோவன் முத்தையாவின்  முன்னை இட்ட தீ. ஹேமாவின் இறுதியாத்திரையும் தீபுஹரியின் தேன்கூடும் உடனடியாக எழுதத் தூண்டியன அல்ல.

புலம்பெயர் எழுத்துகள்: வரலாறாக்கப்படும் புனைவுகள்

இலங்கையின் தமிழ்ப் பகுதியில் நடந்த போர்க்காலம் தொடர்ந்து புனைகதைகளாக எழுதப்படுகின்றன. போர் நிகழ்ந்த காலத்தில் வந்த எழுத்துகளைவிட, போருக்குப் பின் அந்தக் காலங்களை நினைவில் கொண்டு எழுதப்படும் புனைவு எழுத்துகள் - நாவல்களும் சிறுகதைகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன. அதனை எழுதுபவர்களில் பெரும்பாலோர் புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களாக இருக்கின்றனர்.