கலை, இலக்கியத் தளங்களின் நிகழ்காலப் போக்கு எவ்வாறிருக்கிறது என்பதையறியக் கூட்டங்களில் கலந்துகொண்டே ஆகவேண்டும் என்ற நிலை 1990 களுக்குப் பின் இல்லை. அதுவும் முகநூலின் வருகை ஒவ்வொருவரையும் ஆகக் கூடிய தனியர்களாக வாழும்படி ஆக்கிவிட்டது. உலகத்தின் எந்தமூலையிலும் வாழ்ந்துகொண்டு, தமிழ்நாட்டில் இருப்பதுபோல உணரமுடியும் என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டது.
புதியவர்களாக இருக்கும் நிலையில் ஒரு நூலுக்கான முன்னுரை அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கவேண்டும் . ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டலாம் . நிவேதா உதயன் புதியவர் கவிதைக்கு. இது அவரது முதல் தொகுதி