இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீளும் வாரக்கடைசிகள்

படம்
ஒவ்வொரு கம்பத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்றித் தேசப்பற்றைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், தேச முக்கியத்துவம் வாய்ந்த யாராவது இறந்ததைக் கொடியை இறக்கி அடையாளப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தோடு இணையத்திற்குள் நுழைந்தபோது அப்படியொன்றும் நடக்கவில்லை என்பது புரிந்தது.  அரைக்கம்பத்தில் கொடியை இறக்கிப் பறக்கவிடுவது நினைக்கப்படும் நாளின் அடையாளம் என்பது புரிந்தது.

நீர்நெருப்பு :கலைப்பொருள் உருவாக்கிய பெருநிகழ்வு

படம்
புரொவிடென்ஸ், ரோட் தீவின் தலைநகரம் அந்த நகரின் மையத்தில் ஓடுகிறது வூனாஸ்க்வாடக்கெட் என்னும் சிற்றாறு. அதன் கரையில் இருக்கும் சட்டசபை மேடான பகுதியாக இருக்கிறது. அங்கிருந்து தொடங்குகிறது. நீர்வழிப் பூங்கா.பூங்காவின் முடிவில் தொடங்கும்  நகர்மையத்திலிருக்கும் அந்தப் பெருஞ்சிலையிலிருந்து விழா நடக்கும் அந்த மூன்று குறுக்குப்பாலங்களும் இருக்கின்றன.  20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருகலைஞனின் கொடையாகத் தொடங்கிய நீர் நெருப்புப் பெருவிழாவைப் பெரும் நிகழ்வாக்கியிருக்கிறார்கள் அந்த நகரவாசிகள். ஒவ்வொரு கோடையிலும் மே கடைசியில் தொடங்கி நவம்பர் முதல்வாரம் வரை நடக்கும் அந்நிகழ்வுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகமுழுவதுமிருந்து வந்துபோகிறார்கள். நேற்றுக் கூடியிருந்த கூட்டத்தினிடையே நடந்துபோனபோது இதுவரை காதில் விழாத மொழிகளின் ஒலிகளும் கேட்டன; அனைத்துக் கண்டத்து முகங்களும் தெரிந்தன. இந்த ஆண்டில் மொத்தம் ஒன்பது நிகழ்வுகளைத் திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் நிகழ்வு நேற்று (28/05/16).

வெயில் நன்று; கடல்காற்று இனிது

படம்
தொடர்ச்சியான பனிப்பிரதேச வாழ்க்கை மஅனிதத்தோலின் நிறத்தை உருவாக்குவதில் பங்குவகிக்கிறது. வெள்ளைத்தோல் கொண்ட ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்கக் கண்டத்து மனிதர்களுக்கும் வெள்ளைத்தோல் ஒருவரம் என்றால், அதற்குத் தேவையான வைட்டமின் தேடுவது ஒருவேலை. சூரியவெளிச்சமும் வெப்பமும் தொடர்ச்சியாகக் கிடைக்காமல் போகும் நிலையில் வைட்டமின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது அவர்கள் சந்திக்கும் ஒருபிரச்சினை.

மழலையர் பள்ளிகள்.

படம்
கூட்டுக்குடும்ப அமைப்பைத் துறந்து தனிக்குடும்ப அமைப்புக்குள் நுழையவேண்டிய நெருக்கடியை உருவாக்கியது முதலாளித்துவப் பொருளாதாரம். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கருத்தியல் உருவாக்கத்தின் நல்விளைவுகளில் ஒன்று

எப்போதும் நின்றாடும் கள்வன்

படம்
2016 சட்டமன்றத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தல் நடந்திருந்தால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஜனவரியிலேயே பயணத்தை உறுதிசெய்து பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டதால் மாற்ற முடியாது.

மறக்கடித்தல் அதனினும் கொடிது.

படம்
நபர்களின் நடவடிக்கைகளை முன்வைத்து அரசியல் சொல்லாடல்களை உருவாக்குவது வெகுமக்கள் ஊடகங்களின் தந்திரம். ஊடகத் தந்திரங்களுக்குக் கேள்விகளற்றுப் பலியாகும் முதன்மை வர்க்கம் நடுத்தரவர்க்கம். எதையும் அறிவுபூர்வமாக விவாதிப்பதாக நம்பும் நடுத்தரவர்க்கம்.

சில தோல்விகள்;சில வருத்தங்கள்

படம்
சட்டசபைத் தேர்தல் 2016 -ன் முடிவுக்குப்பின் சிலரது தோல்விக்காகப் பலரது வருத்தங்களை முகநூலெங்கும் வாசிக்கமுடிகிறது.  அதிகமானவர்களின் வருத்தம் வி.சி.க.வின் தலைவர் தொல். திருமாவளவனின் தோல்வி பற்றியதாக இருக்கிறது. அடுத்தது சுப. உதயகுமார்.   மூன்றாவதாக முனைவர் வே.வசந்திதேவி.இதில் முனைவர் வசந்திதேவியின் தோல்வியும் சுப.உதயகுமாரின் தோல்வியும் எதிர்பார்த்த தோல்விதான். ஆனால் தொல். திருமாவளவனின் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

ஈழம் : போரும் போருக்குப் பின்னும் - அண்மைப் புனைகதைகளை முன்வைத்து

படம்
இலக்கிய உருவாக்கத்தில் உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவுபற்றிய சொல்லாடல்கள் முடிவிலியாகத் தொடர்பவை. எழுதப்படும் நிகழ்வு ஒன்றே ஆயினும், வெளிப்பாட்டுத்தன்மையையும் எழுப்பும் விவாதங்கள் அல்லது விசாரணைகளையும் இலக்கியத்தின் வடிவமே தீர்மானிக்கிறது. அடிப்படை இலக்கிய வடிவங்களான கவிதை, நாடகம், கதைகள் என்ற மூன்றிலும் எல்லாவற்றையும் எழுதிக் காட்டமுடியும் என்றாலும், வெளிப்படும்போது வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு வடிவத்திற்கும் பொருத்தமான சம்பவங்களும் சொல்முறையும் இருக்கவே செய்கின்றன. இலக்கியப் பிரதிகள் அடிப்படையில் மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் பதிவுசெய்யும் வெளிப்பாட்டு வடிவங்கள். உணர்வுகளும்சரி, உறவுகளும்சரி மனிதர்களுக்கிடையேயானதாகவும், மனிதர்களுக்கும் இயற்கைக்கு மிடையேயானதாகதாகவும் இருக்கின்றன. 

சோ.தர்மன்:நிலவியலில் நிறுத்திய எழுத்து

படம்
என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்; எல்லாவற்றையும் நானே திட்டமிடுகிறேன் எனக் கூறுவதற்குப் பின்னால் இருப்பது நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கைதான் முழுமையாகச் செயல்படுகிறதென்று சொல்லமுடியாது. தன்பிள்ளை, தன்குடும்பம், தன்போக்கு என இருப்பவர்களுக்கு வேண்டுமானால், ஓரளவுக்கு இது சாத்தியமாகலாம். அதுகூட ஓரளவுக்குத்தான். பொதுமனிதர்களை நோக்கி இயங்கும் ஒருவரால், அவரது செயல்பாடுகளை முழுமையாக அவரே திட்டமிட்டுக்கொள்ள முடியாது. எழுத்து, இலக்கியம் என்பது அடிப்படையில் பொதுமனிதர்களை நோக்கிய இயக்கம். ஆகவே எழுத்தாளர்களின் செயல்பாடுகளைச் சூழல் இயக்குகிறது.

கலையைப் பொதுவில் வைப்பது

படம்
தன்னிடம் ஒரு கலையுணர்வு இருக்கிறது; அதனைப் பொதுவில் வைக்கும்போது முழுமையடைகிறது என்ற நம்பிக்கை இந்திய மனிதர்களிடம் இல்லையென்றுதான் கூறவேண்டும். கோ இல்கள் தான் கலை வெளிப்பாட்டுக்களங்களாக இருந்திருக்கின்றன.

துலிப் மலர்க்காட்சி: நன்றியின் வண்ணங்கள்.

படம்
அந்த விழாவைக் காணும் வாய்ப்புக் கொஞ்சம் தவறிவிட்டது.  கனடாவில் தேசியத்தலைநகர் ஒட்டாவிற்கு இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருந்தால் அந்தப் பெருவிழாவைக் கண்டு களித்திருக்கலாம். ஒவ்வோராண்டும் 5 லட்சம் பேருக்கும் அதிகமாக வந்து களித்துக் கொண்டாடிப் போகும் துலிப் மலர்க்காட்சி விழாவிற்காக ஒட்டாவா நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது இந்த ஆண்டுக்கான ( 2016) துலிப் மலர் விழா மே, 12 முதல் 23 வரை நடக்கப்போகும் இன்னும் இரண்டு நாள் கழித்து வந்திருந்தால் விழாவில் பங்கேற்றிருக்கலாம். என்றாலும் மலர்கள் வந்திறங்கிவிட்டன. நடப்பட வேண்டிய இடங்களில் நட்டுவிட்டார்கள். மொட்டாகவும் விரிந்தும் மலர்கள் வண்ணவண்ணமாய் விரிந்துகிடக்கின்றன.