கோட்பாடுகளையும் சித்தாந்தங் களையும் மையப் படுத்திச் செய்யப்படும் அரசியல் கணக்குகளைத் தேர்தல் முடிவுகள் பெரும் பாலான நேரங்களில் பொய்க்கச் செய்திருக்கின்றன. கடந்த கால முன் மொழிதல்கள் அப்படியிருந்த போதிலும் இந்திய ஊடகங்களில் அரசியல் விமரிசனங்கள் செய்பவர்களும், தேர்தல் வெற்றிகளைக் கணக்கிட்டுச் சொல்பவர்களும் இன்னமும் கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் கைவிடுவதாகக் காணோம். பெரும்பாலும் அவற்றை நம்பியே கருத்துக்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நமது அரசியல் விமரிசகர்கள், கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்று கருத்துரைக்க இயலாதவர்களாக இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இரண்டு காரணங்கள் அவற்றுள் முக்கியமானவை. இந்திய சமூகத்தின் தனித்தன்மையாகவும், தேர்தல் அரசியலில் முக்கியமான பங்காற்று வதாகவும் இருக்கும் சாதிகளின் ஒன்றிணைவு பற்றிய தவறான கணிப்புகள் முதலாவது முக்கிய காரணம். இரண்டாவது முக்கியக் காரணம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் இருக்கும் தனித்துவமான தனிநபர்களின் பங்களிப்புகளைக் கணக்கிட முடியாமல் தவிப்பதும், தவிர்ப்பதும் எனச் சொல்லலாம். இவ்விரு காரணங்களில் முதலாவது காரணத்தை அரசியல் கட்சிகளும் உணர்ந்துள்