இடுகைகள்

மார்ச், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதல் பயணம் :அழகிய பெரியவனின் தரைக்காடு

பயணங்கள் எப்போதும் இனிமையானவை; அதிலும் முதல் பயணங்கள் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை. பதின் வயதுக் காலத்தில் நாட்குறிப்புகள் எழுதும் பழக்கம் என்னிடம் இருந்தது. அந்தக் குறிப்புகளில் நான் சென்ற பயணங்கள் பற்றிய குறிப்புகளை விட தவற விட்ட பயணங்களைப் பற்றிய குறிப்புகளையே அதிகம் எழுதி வைத்திருந்தேன் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

கற்றதனாலாய பயன் : சிவகாமியின் அன்றும் இன்றும் கொல்லான்

தமிழகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படும் பொருண்மைகளில் ஒன்று கல்வி. கடந்த ஓராண்டாக சமச்சீர்க் கல்வி என்ற சொற்றொடரைப் பத்திரிகைகள் அச்சிட்டுக் கொண்டே இருக்கின்றன. சமச்சீர்க் கல்வி அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பை வழங்கப் போகிறது என்பது ஒரு புறம் சரியானது தானே என்று தோன்றினாலும், இன்னொரு புறம் இப்போது கிடைக்கும் வாய்ப்பையும் இல்லாமல் ஆக்கி விடுமோ என்ற அச்சமும் உண்டாகாமல் இல்லை.

ஆம் இவை ஆண்களின் பிரச்சினைகள் : நீல பத்மநாபனின் தனி மரம்

இலக்கியம் மனிதர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டும்; நெறிப்படுத்த வேண்டும்; வழிகாட்ட வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்தைப் பலரும் ஒத்துக் கொள்ளவே செய்கிறார்கள். ஒத்துக் கொள்பவர்களுக்குள் அதை வெளிப்படையாகச் செய்யலாமா? மறைமுகமாகச் செய்ய வேண்டுமா? என்பதில் மட்டுமே வேறுபாடுகள் உண்டு.

பின் வாங்குதல் என்னும் பேராண்மை :கந்தர்வனின் சாசனம்

எல்லோரும் ஓர் விலை; எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது கவி பாரதியின் கவிதை வரிகள். இத்தகைய கனவு வரிகளின் பின்னணியில் ‘வேறுபாடுகளற்ற சமுதாயம்’ என்னும் பெருங்கனவு இருக்கிறது என்பதை நாமறிவோம். ரசித்து ரசித்துச் சொல்லப்படும் இந்தக் கனவை முன் மொழிந்த உலகச் சிந்தனையாளர்கள் பலருண்டு.

அந்நியமாகும் ஆசைகள்:சி.என்.அண்ணாதுரையின் செவ்வாழை

‘அவ அந்நியக்காரி; அதனாலே தான் மாமனையோ அத்தைக்காரியையோ கவனிக்க மாட்டேங்குறா. சொந்தபந்தத்திலயிருந்து ஒருத்தி வந்திருந்தா இப்படி ஆயிருக்குமா? ’ - இந்தப் பேச்சில் வரும் அந்நியம் என்ற சொல் அயல் நாடு , அயல் மாநிலம், வேறு மாவட்டம் என இடம் சார்ந்த அந்நியத்தைக் குறிக்கும் சொல் அல்ல. வேற்று மதம், வேறு சாதி அல்லது துணைசாதிகளில் மாறுபாடு என்பதான பண்பாட்டு அந்நியங்களையோ கூடக் குறிக்கவில்லை.

வினையும் எதிர்வினையும் : சோ.தர்மனின் சிதைவுகள்

நான்கு வழிச்சாலைகளின் திறப்புக்குப் பின் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குப் பேருந்துப் பயண நேரம் ஒரு மணி நேரம் குறைந்து விட்டது என்பதில் அந்த நண்பருக்கு ஏகப்பட்ட சந்தோசம். தனது வேலை காரணமாக வாரத்திற்கு மூன்று முறை மதுரைக்குப் போய்வருபவர் அவர். இடைநில்லாப் பேருந்துகள் மூன்றரை மணிநேரத்தில் போய்ச் சேர்ந்து விடுகின்றன என்று ஒரு நாளைக்கு மூன்று முறை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டே இருக்கிறார்.