இடுகைகள்

நவம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலித் இலக்கியம் : 2000 க்கு முன்னும் பின்னும்

படம்
தொலைபேசியில் அழைத்த அவர் பல்கலைக்கழக இலக்கியத் துறையொன்றில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். தலித் இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்து நூல் ஒன்றை எழுதப் போவதாகக் கூறி யாரையெல்லாம் படிக்க வேண்டும் என்று கேட்டார். காலச்சுவடு பதிப்பக வெளியீடான தமிழினி 2000 பெருந் தொகுப்பில் இருக்கும் எனது தமிழ் தலித் இலக்கியம் என்ற கட்டுரையைப் படித்தீர்களா? என்று கேட்டேன். அக்கட்டுரையை வாசித்து விட்டேன்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளின் படைப்பு களைத் தொகுத்து வைத்துள்ளேன்; வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு - அதாவது 2000-க்குப் பிறகு வந்துள்ள படைப்பாளிகள் மற்றும் படைப்புகள் விவரம் வேண்டும் என்றார்.

விசித்திரமான இந்தியா

காலைத் தினசரியைக் கூட வாசிக்கத் தொடங்கியிருக்கவில்லை. தொலைக்காட்சி- தொழில் நுட்பம்- பண்பாடு பற்றித் தீவிரமான ஆய்வுகள் செய்து கட்டுரைகள் எழுதியுள்ள ரேமாண்ட் வில்லியம்ஸின் கட்டுரை கையில் இருந்தது. தொலைக்காட்சிகள் உருவாக்கும் பண்பாட்டுயைப் பற்றி எழுதிய அந்தக் கட்டுரையை மொழி பெயர்த்து விட வேண்டும் என நினைத்து இரண்டாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தேன். அகராதியில் அர்த்தம் பார்க்க வேண்டிய வார்த்தைகளைக் குறித்துக் கொண்டிருந்த போது அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொன்னார். பொதுவாக எங்கள் வீட்டில் காலையில் தொலைக்காட்சியை திறந்து விடுவதில்லை.

இலக்கு ஒன்று: பாதைகள் மூன்று-பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் வியூகங்கள்

1967-இல் தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்பதாகப் பதிவு செய்வதா? பெரியவர் பக்தவச்சலத்தின் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் இயக்கமின்மைக்கும் பிடிவாதத்துக்கும் கிடைத்த தோல்வி என்பதாகப் பதிவு செய்வதா? என்று கேட்டால் நடுநிலையான வரலாற்று ஆய்வாளர்கள் இரண்டாவதைத் தேர்வு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.